வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் மறைந்து இருந்து தாக்கிய கரடி - மேற்பார்வையாளர் படுகாயம்!

கோவை வால்பாறையில் தேயிலைத் தோட்டத்திற்கு பதுங்கியிருந்த கரடி திடீரென தாக்கியதில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளர் புஷ்பராஜன் படுகாயம். வால்பாறை நகர்மன்றதலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் நேரில் நலம் விசாரித்து நிதியுதவி.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்துள்ளது பன்னி மேடு தேயிலை தோட்டம். இங்குள்ள இரண்டாவது டிவிஷனில் தேயிலை தோட்ட மேற்பார்வையாளராக பணி புரிபவர் புஷ்பராஜன் (வயது 53). நேற்று வழக்கம்போல் அவர் தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்தபோது தேயிலைச் செடிகளுக்கு இடையே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, தேயிலை செடிகளுக்கு நடுவே மறைந்திருந்த கரடி ஒன்று திடீரென அவரது காலை கடித்தது. கரடியை பார்த்தவுடன் புஷ்பராஜன் பயங்கரமாக சத்தம் போட்டார். இதையடுத்து, அருகில் இருந்தவர்களும் சத்தமிட்டபடியே ஓடி வந்ததால், அச்சமடைந்த கரடி அவரை விட்டுவிட்டு தப்பி ஓடியது.



கரடி தாக்கியதில் படுகாயம் அடைந்த புஷ்பராஜனை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு உருளிகல் எஸ்டேட்டில் உள்ள மத்திய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



தகவல் அறிந்த வால்பாறை நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வம் மருத்துவமனைக்கு சென்று, படுகாயமடைந்த புஷ்பராஜனை சந்தித்து ஆறுதல் தெரிவித்து, நிதி உதவியும் வழங்கினார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேயிலைத் தோட்டத்திற்குள் பதுங்கியிருந்து தாக்கிய கரடியால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வீடற்றோர் விடுதிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா IAS மத்திய மற்றும் தெற்கு மண்டலங்களில் உள்ள நகர்ப்புற வீடற்றோர் தங்கும் விடுதிகளை...

சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (03.09.2026) மின்தடை

கோவை சரவணம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை செப்டம்பர் 3ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பண...

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் சுகாதார மையம், குடிநீர் பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார...

Juvenile at the Time of Assault: 21-Year-Old Sentenced to 3 Years in Coimbatore

Sathish, a 21-year-old man, has been sentenced to three years in prison in connection with a 2019 assault case in Podanu...

காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சிகளில் கூட்டணி தலைவர்கள் புகைப்படம்: தெளிவான வழிகாட்டுதல் கோரிக்கை

கோவை மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் S.P. சுதன் நாயக் ராஜ், காங்கிரஸ் கட்சியின் சொந்த நிகழ்ச்சிகளில் கூட்டணி கட்சி...

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...