இந்தியாவில் 22 நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகளை மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்டம்

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்ட 100 நகரங்களில் 22 நகரங்கள் மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிந்து விடும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதியன்று ஸ்மார்ட் சிட்டி திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 2016-2018-க்கு இடையில் நடத்தப்பட்ட நான்கு சுற்றாக மேற்கொண்ட ஆய்வு மூலம் 100 நகரங்களை மேம்பாட்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன.

குறிப்பாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் முக்கிய நகரங்களை மேம்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். மேலும் இந்த நகரத்தில் வாழும் குடிமக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரம், தூய்மையான சூழலை வழங்குவதோடு, பல்வேறு பிரச்சினைகளுக்கு "ஸ்மார்ட் தீர்வுகளை" கொண்டுவர திட்டமிடப்பட்டது.

இந்த திட்டத்தில் போபால், இந்தூர், ஆக்ரா, வாரணாசி, புவனேஸ்வர், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, ராஞ்சி, சேலம், சூரத், உதய்பூர், விசாகப்பட்டினம், அகமதாபாத், காக்கிநாடா, புனே, வேலூர், பிம்ப்ரி-சின்ச்வாட், மதுரை, அமராவதி, திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்த 22 நகரங்களில் நடைபெற்று வரும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் முழு பணிகளும் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைந்து ஸ்மார்ட் சிட்டிகளாக மாறிவிடும். இது மக்களின் வாழ்க்கை தரத்தை பெரிதளவில் உயர்த்தும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் ராஜ்யசபாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளில் பணி ஆணைகள் வழங்கப்பட்ட ரூ.1,81,322 கோடி மதிப்பிலான 7,804 திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. சுமார் 5,246 திட்டங்கள் ரூ.98,796 கோடி மதிப்பில் இதுவரை நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார், மிஷன் வழிகாட்டுதல்களின்படி, மத்திய அரசு ஐந்து ஆண்டுகளில் ரூ.48,000 கோடி நிதியுதவி அளிக்கும், சராசரியாக ஒரு நகரத்திற்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி என்ற அளவில் இருக்கும். அதோடு மாநில அரசு அல்லது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பால் சமமான தொகை இந்த நகரங்களுக்கு அளிக்கப்படும்.

மீதமுள்ள 78 நகரங்களில் திட்டங்கள் அடுத்த 3-4 மாதங்களில் முடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கூடுதல் நகரங்களைச் சேர்ப்பதற்கான எந்த திட்டமும் அரசாங்கத்தின் பரிசீலனையில் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...