கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது

கோவை ரயில் நிலையத்தில் நின்ற நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் பயணியிடம் லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் பணத்தை திருடிய கேரளா இளைஞரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை ரயில் நிலையத்தில் லேப்டாப் திருடிய வாலிபரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலசுப்பிரமணி (50). இவர் கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் படித்து வருகிறார். இந்நிலையில் பலசுப்பிரமணி சொந்த ஊர் செல்ல நேற்று தனது நண்பரான விஜய் என்பவருடன் கோவை ரயில் நிலையம் வந்தார்.

அப்போது அவரது உடைமைகளை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலின் இருக்கையில் வைத்து விட்டு, கிழே இறங்கிச் சென்று நண்பருடன் பேசி விட்டு உள்ளே வந்து பார்த்த போது அவரது லேப்டாப் பை மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து அவர் ரயில்வே போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் ரயில் நிலையத்தைக் கண்காணித்த போது 5ஆவது நடைமேடையில் லேப்டாப் பையுடன் சென்ற இளைஞரைப் பிடித்த விசாரித்த போது, லேப்டாப் திருடியது தெரியவந்தது.

மேலும் அவரிடம் போலீசார் விசாரித்ததில், கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த சியாஸ் (20) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து லேப்டாப் மற்றும் ரூ.4 ஆயிரம் ரூபாயைப் பறிமுதல் செய்து சியாஸை கைது செய்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்: குடிநீர் முதல் சாலை வசதி வரை 101 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில் குடிநீர், சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்...

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...