ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவு ரத்து - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் உத்தரவு.


கோவை: ஆர்.எஸ்.எஸ் பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு காந்தி பிறந்த நாளையொட்டி அக்டோர் 2ம் தேதி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டது. ஆனால் இந்த அணிவகுப்பு தமிழக காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நவம்பர் 6ஆம் தேதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்ட நிலையில், பல்வேறு பகுதிகளில் காவல்துறை அனுமதி வழங்கவில்லை என மீண்டும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை உள் அரங்குகளில் நடத்தலாம் என உத்தரவிட்டிருந்தார். இதனை ஏற்க மறுத்த ஆர்.எஸ்.எஸ். தரப்பில் மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். பேரணியை சுற்றுச்சுவருடன் கூடிய திடலில் நடத்த வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

மேலும், ஆர்.எஸ்.எஸ் பேரணியை நடத்த மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும், அவ்வாறு விண்ணப்பித்தால் சட்டப்படி பரிசீலனை செய்து முடிவெடுக்க காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதேபோன்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும், யாருடைய மனதையும் புண்படுத்தக்கூடாது. மற்ற மதத்தினரை புண்படுத்தும்படி கோஷங்களை எழுப்பக்கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Newsletter

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...