கோவையில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி - பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

கோவை சிங்காநல்லூர் அருகே தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலை பள்ளி மற்றும் தோழமை அறக்கட்டளை இணைந்து நடத்திய ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்டம் சிங்காநல்லூர் அருகே நடைபெற்ற ரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகே தோழமை அறக்கட்டளை மற்றும் தியாகி எம்.ஜி.ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி இணைந்து ரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.



இந்த இரத்த தான விழிப்புணர்வு பேரணியில் ஏராளமான பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு கையில் ரத்த தானம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்றனர்.

அப்போது பேசிய தோழமை அறக்கட்டளை நிறுவனர் பிரியதர்ஷினி தங்கராஜ் கூறுகையில், "கடந்த 13 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் ரத்ததான ஒருங்கிணைப்பு பணிகளை செய்து வருகிறோம். ரத்ததானம் குறித்த விழிப்புணர்வு பள்ளி மாணவ மாணவிகள் இடையே ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது" என்றார்.

Newsletter

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...