'கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை' - சேலம் கோட்ட ரயில்வே மேலாளர்


கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்கிங் பணிகளை டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை எனவும் பணமதிப்பிழப்பு விவகாரம் கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா தெரிவித்துள்ளார்.

கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா ஆய்வு மேற்கொண்டார், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தற்போது கோவை ரயில் நிலையத்தில் ஸ்கைவாக்,எக்ஸ்லேட்டர் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அவை பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு வரும் எனவும் தெரிவித்தார். 

போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி செல்லும் அகல ரயில் பாதை திட்டத்துக்கானபணிகள் 95% முடிவடைந்துள்ளது என தெரிவித்த அவர் கோவை ரயில் நிலையத்தில் மல்டிலெவல் கார்பார்க்கிங் அமைக்கும் பணிகளுக்கான டெண்டரை யாரும் எடுக்க முன் வரவில்லை எனவும் உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு நடவடிக்கை கூட இதற்க்கு ஒரு காரணமாக இருக்கலாம் எனவும் ஹரிசங்கர் வர்மா அப்போது தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...