வால்பாறை அருகே குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற ஒற்றை யானை - பொதுமக்கள் அச்சம்!

வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில், தகவலறிந்து வந்த வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்ற நிலையில் வனத்துறையினர் அதனை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டுயானைகள் கூட்டமாகவும், குட்டியுடன் மற்றும் தனியாகவும் சுற்றித்திரிந்து வருகின்றன.

குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து வீடுகளை இடித்து சேதப்படுத்தும் யானைகள், வாழைமரம் பலா மரம் போன்றவற்றையும் சேதப்படுத்தி வருகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவதால் அப்பகுதி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில் இன்று காலை வால்பாறை அருகேயுள்ள புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதிக்குள் நுழைய முயன்றது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.



இதன் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை, தேயிலைத் தோட்டம் வழியாக மீண்டும் வனப்பகுதிக்குள்ளேயேவிரட்டினர். மேலும், வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் தடுக்கும் வகையில், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...