ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்.வேட்பாளருக்கு ஆதரவு - இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும் என்றும் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் முடிவு.


திருப்பூர்: உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பெதப்பம்பட்டியில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் 5 ஆயிரம் வழங்க வேண்டும், ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து தீவிர வாக்கு சேகரிப்பது என்றும், பெதப்பம்பட்டி நால்ரோடு பகுதியில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும், பெதம்பம்பட்டி அருகே தனியார் அரசு தொழில்நுட்பக் கல்லூரி அருகில் செயல்படும் அரசு மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் மாநில செயற்குழு உறுப்பினருமான குணசேகரன் மற்றும் அப்பாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

துணை குடியரசுத் தலைவர் கோவை வருகை: ஜூலை 21 முதல் 23 வரை ட்ரோன் பறக்க தடை

துணை குடியரசுத் தலைவரின் கோவை வருகையையொட்டி, ஜூலை 21 முதல் 23 வரை, உப்பிலிபாளையம், ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை என மாநகரின்...

ரூ.5,000 லஞ்சம் புகார் எதிரொலி: பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், கள்ளத்தொடர்பு தொடர்பான வழக்கில் விசாரணைக்கு வந்த நபரிடம் ரூ.5,000 லஞ்சம் பெற்றதாக...

வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் தானியங்கி வாகனத் தடுப்பு அமைப்பை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் புதிதாக அமைக்கப்பட்ட தானியங்கி பூம் பேரியர் அமைப்பு,...

அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் வினாடிக்கு 461 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை நீர்மட்டம் 51.12 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம் 29.99 அடியாகவும் உள்ளது. அண...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழையால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. பரம்பி...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ரத்து

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (21.07.2026) நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...