சூலூர் கலங்கல் பகுதியில் கஞ்சா விற்பனை - வடமாநில இளைஞர் கைது

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.


கோவை: சூலூர் கலங்கள் பகுதியில் கஞ்சா விற்ற வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்நிலையில் சூலூர் கலங்கள் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்குச் சென்று போலீசார் ஆய்வு செய்தபோது சந்தேகத்திற்கு இடமாக நின்ற வடமாநில இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

விசாரணையில், பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தோபா பிரிதான் (23) என்பதும், கோவையில் தங்கி கூலி வேலை செய்து கொண்டு கஞ்சா விற்பனைகளும் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவர் தனது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3.4 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...