காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது கருப்பு மை ஊற்றி அழித்ததால் பரபரப்பு

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.


கோவை: காந்திபுரம் மேம்பால தூண்களில் வரைந்த ஓவியங்கள் மீது விஸ்வஜன முன்னேற்றக் கழகத்தினர் கருப்பு மை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் காந்திபுரம் மேம்பாலத்தில் போஸ்டர்கள் ஒட்டுவதைத் தடுக்க தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டு மேம்பாலத் தூண்களில் ஐம்பெரும் காப்பியங்களான சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, குண்டலகேசி, மணிமேகலை, வளையாபதி ஆகியவற்றின் கதைகளை ஓவியங்களாக வரைந்து வருகின்றனர்.



இந்நிலையில் இந்த ஓவியங்களில் கோவலன் மரணத்திற்கும், திருடியதிற்கும், பொற்கொல்லர்கள் தான் காரணம் என்பதைப் போன்று பொற்கொல்லரை இழிவுபடுத்தி தவறாகச் சித்தரித்து, ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகக் கூறி விஸ்வஜன முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பினர் காந்திபுரம் மேம்பால தூண்களில் வரையப்பட்ட ஓவியங்கள் மீது கருப்பு மையை ஊற்றி அழித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



மேலும் ஓவியங்களை மையை ஊற்றி அளிப்பதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து அதனையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஓவியர்களைக் கொண்டு மிக நேர்த்தியாகச் சிரமப்பட்டு வரையப்பட்ட ஓவியத்தை சில நொடிகளில் அளித்து சின்னாபின்னம் ஆக்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனப் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

காவல் நிலையம் எதிரே உள்ள தூண்களில் வரைந்த ஓவியத்தை ஆட்கள் நடமாட்டம் உள்ள பகல் நேரத்தில் மையை ஊற்றி நாசப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...