கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் பற்றி எரிந்த மரத்தால் பரபரப்பு

மேட்டுப்பாளையம்-உதகை சாலையில் உள்ள கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை ஓரத்திலிருந்த பச்சை மரம் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு.



கோவை: கல்லார் பேருந்து நிறுத்தம் பகுதி அருகே பற்றி எரிந்த மரத்தை தீயணைப்பு துறையினர் அணைத்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் உதகை சாலையில் கல்லார் தூரி பாலம் அருகே 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சாலையோர மரம் ஒன்று உள்ளது.

இந்த மரத்தின் அருகே கல்லார் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குப்பைகளைக் கொட்டி வருவது வழக்கம்.இந்த நிலையில் இன்று மாலை மரத்தின் அருகே கொட்டப்பட்டு இருந்த குப்பைகளிலிருந்து புகை வரத் தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் பச்சை மரம் திடீரென தீ பிடித்து எரிய தொடங்கியது.

மரத்தில் தீ மளமளவெனப் பரவி பற்றி எரிய ஆரம்பித்தது. இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும், மேட்டுப்பாளையம் காவல் துறையினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரினை பீய்ச்சி அடித்து மரத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

மரத்தின் அடியில் குப்பைகள் கொட்டிய இடத்தில் யாரோ தீ வைத்த உள்ளனர்.அதன் காரணத்தால் மரம் தீ பிடித்து எரிந்து உள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் உதகை சாலையில் திடீரென பச்சை மரம் தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...