வனத்துறை சார்பில் மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டம்

கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாகவும், வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால், காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளதால் உடுமலை சுற்றுவட்டாரத்தில் உள்ள மலைக் கிராமங்களில் காட்டுத் தீ குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது.


திருப்பூர்: காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து அதிகாரிகள் மலைவாழ் மக்களுக்கு எடுத்துரைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனக்கோட்டத்தில் கோடைக் காலம் தொடங்கிவிட்டதால் வெப்பத்தின் காரணமாகவும், அதிகப்படியான பனிப்பொழிவு காரணமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள் எல்லாம் கருகத் தொடங்குவதால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்புள்ளது.



இதைக் கருத்தில் கொண்டு திருப்பூர் வனக்கோட்டத்தில் அமைந்துள்ள தளிஞ்சி, மஞ்சம் பட்டி, கோடந்தூர், பொருப்பாறு உட்பட்ட 17 செட்டில்மென்ட்டுகளிலும், வன எல்லையில் உள்ள கிராமங்களிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன்படி கோடந்தூர்,தளிஞ்சி மலைவாழ் மக்களுக்கும், குதிரையாறு அணை தொடக்கப்பள்ளியிலும் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் க.கணேஷ்ராம் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.



இதில் உடுமலைப்பேட்டை வனச்சரகர் சிவக்குமார், அமராவதி வனச்சரகர் சுரேஷ், கொழுமம் வனச்சரகர் மகேஷ் மற்றும் வனப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...