கோவையில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 4 வயது பெண் குழந்தையை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், செல்வபுரத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக தனது 4 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் குழந்தையின் தாய்க்கு ஆயுள் தண்டணை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை செல்வபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த்குமார். இவரது மனைவி திவ்யா. இத்தம்பதியினருக்கு 4 வயதில் ஹரிவர்ஷா என்ற பெண் குழந்தை இருந்த நிலையில் கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு திவ்யா அவரது தாயார் வீட்டில் தங்கி இருந்து கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.



இந்நிலையில் வீட்டில் தாயாருடன் ஏற்பட்ட பிரச்சனையில் வீட்டில் இருந்த தனது மகள் ஹரிவர்ஷாவை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கடந்த 03.06.2016 அன்று கொலைசெய்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திவ்யா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

இந்த வழக்கு கோவை மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த வழக்கில் குழந்தையின் தாய் திவ்யாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் இன்று உத்திரவிட்டார். இதனையடுத்து திவ்யா கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...