தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரசம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வகையான 117 வழக்குகள் விசாரிக்கப்பட்டு, ரூ.4.25 கோடிக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 117 வழக்குகள் ரூ.4.25 கோடிக்கு சமரசம் செய்து வைக்கப்பட்டன.

மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின் படி தாராபுரம் வட்ட சட்டப் பணி குழுவின் சார்பில் தேசிய மக்கள் சிறப்பு நீதிமன்றம், தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தாராபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி எஸ்.நாகரஜன் தலைமை தாங்கிய நிலையில், வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு, ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.பாபு, நீதிபதி மதிவதனி வழங்காமுடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் 24 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 79 உரிமையியல் வழக்குகள், ஜிவனாம்ச வழக்குகள் 4, குடும்ப வன்முறை, மணி சூட் 1, குடும்ப வழக்கு 1, செக் மோசடி வழக்குகள் 4 என குற்றவியல் சிறு குற்றங்கள் உள்ளிட்ட 117 வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ரூ.4 கோடியே 44 லட்சத்து 75 ஆயிரத்துக்கான சமரச தீர்வு காணப்பட்டது.

மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குக்கான சான்றிதழ்களை வட்ட சட்ட பணிக்குழு நீதிபதி எம்.தர்மபிரபு பயனாளிகளுக்கு வழங்கினார்.

இதில் மூலனூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்த மோகன் ராஜ் (45) கடந்த 2018-ம் ஆண்டு சாலை விபத்தில் இறந்தார். இவருடைய மனைவி பீலா புனிதவதி தாராபுரம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

வழக்கை வழக்கறிஞர் எஸ்.டி.சேகர் வாதாடி வந்ததையடுத்து நியூ இந்தியா காப்பீட்டு நிறுவனம் இறந்து போன மோகன் ராஜூக்கு அதிகபட்சமாக காப்பீட்டுத் தொகையாக ரூ.95 லட்சத்தை அவருடைய மனைவி பீலா புனிதவதி மற்றும் மகள், தாயார் ஆகியோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.

இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாதாடி பெற்று தந்த வழக்கறிஞர் கோவி இளஞ்செழியன் மற்றும் எஸ்.டி.சேகருக்கு நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது. இந்நிகழ்வில், வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கலைச்செழியன் மற்றும் செயலாளர் எம்.ஆர்.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...