திருப்பூர் உடுமலையில் கோடைக்கு முன்பே தர்பூசணி விற்பனை அமோகம்!

உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் கோடை சீசன் துவங்குவதற்கு முன்னதாகவே, வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தர்பூசணி பழ விற்பனை அமோகமாக நடந்து வருவதாக வியாபாரிகள் கருத்து.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சீசனுக்கு முன்னதாகவே, தர்பூசணி விற்பனை களைகட்டி வருகிறது.

உடுமலை சுற்று வட்டார பகுதிகளுக்கு, கோடை காலத்தை சமாளிக்க, திண்டிவனம் உட்பட பகுதிகளில் இருந்து, தர்பூசணி விற்பனைக்காக, கொண்டு வரப்படுகிறது. இச்சீசனை இலக்கு வைத்து, உடுமலை பகுதியிலும், தர்பூசணி சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏப்ரல் மற்றும் மே மாதத்தை இலக்காக வைத்து, நுாற்றுக்கணக்கான ஏக்கரில், தர்பூசணி நடவு செய்யப்பட்டு, தொடர் மழையால், சில இடங்களில் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், பாதிப்பு இல்லாத பகுதிகளில், அறுவடை இன்னமும் துவங்காத நிலையில், வழக்கத்தை விட முன்னதாகவே பிற மாநிலங்களில் இருந்து தர்பூசணி வரத்து துவங்கியுள்ளது.



அதன்படி, ஆந்திராவில், இருந்து கிலோ, 20 ரூபாய் முதல் தர்பூசணி கொள்முதல் செய்யப்பட்டு, உடுமலை நகர பகுதியில், விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.



கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்தி வருவதால், வெளிமாநில தர்பூசணி விற்பனையும், களைகட்டி வருவதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...