கோவையில் இரு சக்கர வாகனம் திருட்டு - சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது!

கோவை சின்னாறு அணைக்கட்டு அருகே இரு சக்கர வாகனத்தை திருடிய வழக்கில் சிறுவர்கள் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை வேடப்பட்டி பிள்ளையார் கோயில் வீதியை சேர்ந்தவர் குரு பிரசாத் (வயது23). இவர் நேற்று தனது நண்பர்களான கருணாகரன், கௌதம், சஞ்சய் குமார் ஆகியோருடன் இரண்டு வாகனங்களில் ஈஷா நோக்கி சென்றனர்.

முன்னதாக, சின்னாறு அணைக்கட்டை பார்ப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஜீவசமாதி அருகே வண்டியை நிறுத்திவிட்டு அணைக்கட்டை பார்த்துவிட்டு மீண்டும், வந்து பார்த்தபோது குருபிரசாத் வந்த இருசக்கர வாகனம் மாயமானது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் அக்கம் பக்கத்தில் கேட்டபோது மூன்று நபர்கள் இரு சக்கர வாகனத்தை தள்ளி சென்றதாக தெரிவித்தனர். இதை அடுத்து நண்பர்களுடன் நரசிபுரம் சாலையில் சென்றபோது அவரது இரு சக்கர வாகனத்தை மூன்று நபர்கள் தள்ளிச் சென்றது தெரியவந்தது.

இதைப்பார்த்த குருபிரசாத் மற்றும் நண்பர்கள் பொதுமக்கள் உதவியுடன் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை திருடி சென்றதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.



பின்னர், பிடிபட்ட மூன்று பேரையும் ஆலாந்துறை போலீசில் குருபிரசாத் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர்கள் பூளுவபட்டியை சேர்ந்த ரஜீவன் (வயது21), மற்றும் 17, 16 வயது சிறுவர்கள் என்பது தெரியவந்தது. திருட்டு தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...