கோவை குறைதீர்ப்புக் கூட்டத்தில் பொதுமக்களை தாக்கிய திமுக கவுன்சிலர் - வைரல் வீடியோ

கோவை அன்னூர் அருகே தரமற்ற சாலைகள் போடப்பட்டதாக குறைதீர்ப்புக் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய பொதுமக்கள் மீது திமுக கவுன்சிலர் மற்றும் அவரது ஆட்கள் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில்பாளையத்தை அடுத்துள்ள கொண்டையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட 9வது வார்டு லட்சுமி கார்டன் பகுதியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சில நாட்களுக்கு முன் 6 லட்சத்து 31 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலைகள் தரமற்ற முறையில் இருப்பதாக புகார் எழுந்தது.



இந்த நிலையில் நேற்றிரவு லட்சுமி கார்டன் பகுதியில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் 9 வது வார்டு திமுக கவுன்சிலர் மோகன் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அப்பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் தரமற்றமுறையில் சாலைஅமைக்கப்பட்டுள்ளதாக கூறி, அது குறித்து கேள்வி எழுப்பினர்.இதனால் கவுன்சிலர் மோகன் மற்றும் கேள்வியெழுப்பிய இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.



வாக்குவாதம் முற்றிய நிலையில், திமுக கவுன்சிலர் மோகன் உட்பட அவரது தரப்பினர்கள் கேள்வி கேட்டவர்களை தாக்கியுள்ளனர். மேலும், திமுகவை சேர்ந்த பெண் ஒருவர் பொதுமக்களில் ஒருவரை செருப்பால் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மூவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து லட்சுமி கார்டன் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகபோலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, தாக்குதலில் ஈடுபட்ட திமுகவினர் மருத்துவமனையில் அனுமதியாகிக்கொண்டு, பொதுமக்கள் மீது பொய் புகார் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறைதீர்ப்புக் கூட்டத்தில், திமுக கவுன்சிலர் பொதுமக்களை தாக்கும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...