கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஃபெர்டிலிட்டி மருத்துவர் தகவல்


கோவையில் 15 சதவிகித தம்பதியர்களுக்கு குழந்தை பேறின்மைக்கு காரணம் தெரிவதில்லை என நோவா ஐவிஐ ஃபெர்டிலிட்டி மருத்துவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-



"விளக்கமுடியாத மகப்பேறின்மை" என்பது காரணம் கண்டறியப்பட முடியாத ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளால் ஏற்படும் குழந்தைப் பெறின்மை ஆகும்.

90 சதவிகித தம்பதியரில் கருத்தரிக்காததற்கான காரணத்தை பரிசோதனைகள் மூலம் ஆணிடமோ, பெண்ணிடமோ குறைபாடுகள் உள்ளதை அறியலாம். சில சமயம் ஆண், பெண் என இருவரிடமும் குறைகள் இருப்பதைக் கண்டறியலாம்.

பொதுவாக குழந்தைப்பேறுக்கு முயற்சிக்கும் தம்பதியருக்கு கருக்குழாய் பரிசோதனை, விந்தணு பரிசோதனை, அல்ட்ரா ஸ்கேன் பரிசோதனை போன்ற பொதுவான பரிசோதனைகள் நடத்தப்படும். இப்பரிசோதனைகளின் மூலம் காரணம் அறியாத நிலையில் அவர்கள் விளக்கமுடியாத மகப்பேறின்மையில் அடக்கப்படுகிறார்கள்.

கோவையில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகிதம் வரையில் இத்தகைய விளக்க முடியாத குழந்தையின்மை இருப்பது தெரிகிறது. இத்தகைய விளக்க முடியாத மகப்பேறின்மையில் கருமுட்டை, விந்தணு போன்ற அடிப்படை நிலையில் குறைபாடுகள் இருப்பதார் சாதாரண பரிசோதனைகளில் கண்டறியப்பட முடிவதில்லை.

சாதாரணமாகத் தெரியும் விந்தணு, கருமுட்டை கூட கருவாகும் தன்மை அற்றுப் போகலாம். மைக்ரோஸ்கோப்பியில் நன்றாகத் தோன்றும் கரு, கருப்பையில் பொருந்தாமல் போகலாம். இவை சாதாரண பரிசோதனைகளால் கண்டுபிடிக்க முடிவதில்லை.

கருமுட்டை தரம் குறைபாடு, விந்தணு செயல்திறன் குறை, கருப்பை இருந்தும் ஒட்டாமல் இருக்கும் தருணம்போல கண்டறிய முடியாத மகப்பேறின்மைக்கு IVF தொழில்நுட்பம் ஒரு சிறந்த வழியாகும்.

விளக்கமுடியாத மகப்பேறின்மை கொண்டோர் பல பரிசோதனைகள் மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி விரக்தியில் இருக்கும நிலையில் IVF சிகிச்சை முறையில் கருவுற்றவுடன் பெருமகிழ்ச்சி அடைவர் என தெரிவித்தார்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...