சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பங்கேற்பு - ஈஷாவில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணி தீவிரம்!

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் வரும் 18ம் தேதி நடைபெறவுள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ பங்கேற்கவுள்ளார். இதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஈஷா யோகா மையத்ததில் ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.



கோவை: கோவை ஈசா யோகாவில் வரும் 18 ஆம் தேதி நடைபெற உள்ள சிவராத்திரி நிகழ்ச்சியில் இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ கலந்து கொள்ள உள்ளார்.

இதையொட்டி, 18 ஆம் தேதி மாலை 3 மணியளவில் டெல்லியில் இருந்து தனி விமான மூலம் அவர் கோவை விமான நிலையம் வருகிறார்.

முதல் முறையாக கோவை வரும் குடியரசு தலைவர் ரேஸ்கோர்ஸ் அரசு விருந்தினர் மாளிகை செல்கிறார்.

பின்னர் வடவள்ளி, தொண்டாமுத்தூர் வழியாக ஈசா யோகா மையத்திற்கு செல்கிறார்.

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு செல்லவுள்ள சாலைகளை ஐஜி சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஸ்ணனுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அதுமட்டுமின்றி, குடியரசு தலைவர் வருகையையொட்டி சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியரசு தலைவர் திரௌபதி முர்மூ வருகையை ஒட்டி ஈசா யோகா மையத்தில் ஹலிகாப்டர் இறங்கு தளம் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...