கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் - கோவை ஆட்சியர் முன்னிலையில் உறுதிமொழி ஏற்பு

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும், கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அதிகாரிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


கோவை: கொத்தடிமைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

கொத்தடிமை தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றிடவும் கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கிடவும் வருடம் தோறும் பிப்ரவரி 9ஆம் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி இன்று இத்தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் உறுதி மொழி ஏற்றுக் கொள்ளப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாகக் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இத்தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.



முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தொடங்கி வைத்தார்.



பின்னர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.



இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோகிலா, தொழிலாளர் உதவி ஆணையர் காயத்ரி உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...