உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரை தூசி படிந்து காணப்படுவதால் மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலக கட்டிடத்திற்கு மாதம் ஒருமுறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்திற்குதினமும் உடுமலைமற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு வருகை புரிகின்றனர்.

இந்த நிலையில் பழமையான வட்டாட்சியர் அலுவலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் தரப்பில் கடந்த சில மாதங்களாகவே புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது.



வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆதார் சேவை மையக் கட்டடம் உட்பட பல்வேறு பகுதிகளில் மேற்கூரை போதிய பராமரிப்பு இல்லாமல் தூசி படிந்து அலங்கோலமாக காட்சி அளிக்கிறது.



பார்ப்பதற்கு மிகவும் பழமையான கட்டிடம் போல காட்சியளிக்கும் நிலையில், ஆதார் சேவை மையத்துக்கு வரும் பொதுமக்கள் மீதுமேற்கூரையில் இருந்துதூசுகள் அதிக அளவு விழுந்து வருகின்றன.

ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாதத்திற்கு ஒரு முறையாவது வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் தரப்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...