முதுமலை நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய மயில் - இணையத்தில் வீடியோ வைரல்!

பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ள நிலையில் முதுமலை நெடுஞ்சாலையில் பெண் மயில்களை வசிகரிக்கும் விதமாக ஆண் மயில், தோகை விரித்தாடிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.



நீலகிரி: மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலையில் தோகை விரித்தாடிய ஆண் மயிலை, பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வரும் காட்சியை வாகன ஒட்டிகள் வியர்ந்து பார்த்துச் சென்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக் காலம் துவங்க உள்ளது. இதனால் வனப் பகுதிகள் வறண்டு வரும் நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திலும் மரம், செடி, கொடிகள் பொலிவிழந்து வருகின்றன.



இதனால் வன விலங்குகள் சாலை ஓரத்தில் உலா வர தொடங்கி உள்ள நிலையில் மசினகுடியிலிருந்து தெப்பக்காடு செல்லும் நெடுஞ்சாலைக்கு வந்த ஒருஆண் மயில் தன் அருகே வந்த பெண் மயில்களைகாதல் வசப்படுத்தி அவற்றை வசிகரிக்கும் விதமாகத் தனது தோகைகளை விரித்து நடனமாடியது. ஆண் மயிலின் நடனத்தைப் பார்த்து பெண் மயில்களும் சுற்றிச் சுற்றி வந்தன.

அப்போது அந்த வழியே சாலையில் சென்ற வாகனங்களை கூட பொருட்படுத்தாத ஆண் மயில் தொடர்ந்து நடனமாடியதை வீடியோவாக பதிவு செய்த வாகன ஓட்டிகள் இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...