கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் தார் சாலை பணி - மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு!

கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் ரூ.5.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தார் சாலை பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் திடீர் ஆய்வு மேற்கொண்டு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


கோவை: கோவை மாவட்டம் தண்ணீர்பந்தல் பகுதியில் நடைபெற்று வரும் தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம் 32 வது வார்டு மற்றும் 37 வது வார்டுக்கு உட்பட்ட தண்ணீர் பந்தல் சாலை, மகேஸ்வரி நகர் சந்திப்பு முதல் விளாங்குறிச்சி பாலம் வரை தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ5.28 கோடி மதிப்பீட்டில் 2.96 கிலோமீட்டர் நிலத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் சாலை பணிகள் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சாலையின் அகலம் மற்றும் தரம் குறித்தும் ஒப்பந்ததாரிடம் கேட்டறிந்தார்.

அதேபோல் விரைந்து பணிகளையும் முடித்து மக்கள் பயன்பாடுத்து கொண்டு வர வேண்டும் என அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின் போது உதவி ஆணையாளர் முத்து ராமலிங்கம், உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....