வால்பாறை அருகே தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சோகம்

வால்பாறை அருகே லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது தேனீக்கள் தாக்கியதில் மாரிமுத்து என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகேதேனீக்கள் தாக்கியதில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறை அருகேயுள்ள லோயர் பாரலை எஸ்டேட் பகுதியில் மாரிமுத்து (45) என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகன ஓட்டுனராக வேலை செய்து வந்த மாரிமுத்து உடல் நலக்குறைபாடு காரணமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனிடையே நேற்று பிற்பகல் வீட்டில் இருந்து பொருட்கள் வாங்குவதற்கு மாரிமுத்து கடை வீதிக்கு சென்றுள்ளார். அப்போது கூட்டமாக வந்த தேனீக்கள் அவரை தாக்கியுள்ளது.



இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி மற்றும் கவுன்சிலர் அன்பரசன் செல்வம் ஆகியோர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.



மேலும் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.

சாலையில் நடந்து சென்றவரை தேனீக்கள் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்துள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...