ஈரோடு இடைத்தேர்தலில் 'ருசி'கர பிரச்சாரம் - பரோட்டா அடித்து வாக்குச்சேகரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்குச் சேகரிக்க சென்ற அமைச்சர் செஞ்சி மஸ்தான், அப்பகுதியில் இருந்த கையேந்தி பவனில் பரோட்டோ அடித்து வாக்கு சேகரித்தது பொதுமக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.



ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து தமிழ்நாடு அமைச்சர்கள் கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் ஒருபகுதியாக ஈரோடு முனிசிபல் காலனி பகுதியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பல்சமய நல்லுறவு இயக்க தலைவர் ஹாஜி முகமது ரஃபி, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது, திமுக அரசு கொண்டு வந்துள்ள ஏழை, எளிய மக்களுக்கான, மாணவ மாணவிகளுக்கான ஏராளமான நலத்திட்டங்களைஅவர்கள் பட்டியலிட்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர்.



இந்த வாக்கு சேகரிப்பின்போது அங்கிருந்த கையேந்திபவன் ஒன்றிற்கு சென்ற அமைச்சர் செஞ்சிமஸ்தான், அங்கு வைக்கப்பட்டிருந்த மாவை தட்டி பரோட்டா போட்டவாறு, உணவகத்தில் சாப்பிட வந்தவர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடம் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.



பரோட்டா அடித்து காங்கிரஸ் வேட்பாளருக்கு தமிழக அமைச்சர் வாக்குச்சேகரித்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...