கோவை இடையர்பாளையத்தில் மாநில அளவிலான யோகா போட்டி - மாணவ, மாணவிகள் அசத்தல்

கோவை இடையர்பாளையத்தில் நடந்த 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டியில், பல்வேறு பிரிவுகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.



கோவை: இடையர்பாளையத்தில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

கோவையில் 11வது மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி, இடையர்பாளையத்தில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்றது. ஆல்பா யோகா பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற போட்டிகளை யோகா கல்ச்சுரல் சொசைட்டி முன்னாள் தலைவர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற யோகா போட்டிகளில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 4 பிரிவுகளாகவும், இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தனியாகவும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண் பெண்களுக்கு தனி பிரிவாகவும் போட்டிகள் நடத்தப்பட்டன.



இதில் போட்டியாளர்கள் 3 ஆசனங்களை 3 நிமிடங்கள் செய்து காட்டினர். மேலும் பேக் பெண்டிங், ஹேண்ட் பேலான்சிங், லெக் பேலன்சிங், பாடி டிவிஸ்டிங் ஆசனங்களும் ஆர்டிஸ்டிக் யோகா, ரிதமிக் யோகா உள்ளிட்ட பிரிவுகளில் பல்வேறு வகையான ஆசனங்களை செய்து காண்பித்து அசத்தினர்.



இதில் ஆல்பா யோகா பயிற்சி மைய நிறுவனர் பழனிச்சாமி மற்றும் யோகா ஆசிரியர்கள் சம்பத்குமார், ராஜ்குமார், நாகலட்சுமி ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.



வெற்றி பெற்றவர்களுக்கு யோகா குரு சுவாமி தேஜாமயானந்தா பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...