தாராபுரத்தில் இருசக்கர வாகனத்திருட்டு வழக்கு - சிசிடிவி காட்சி உதவியுடன் 3 பேர் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இரு சக்கர வாகனத்திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் தேடப்பட்டு வந்த 3 குற்றவாளிகளை சிசிடிவி காட்சிகள் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலைசாலையில் ஸ்டேட் பேங்க் அருகிலும் மற்றொரு பகுதியான பெரிய கடைவீதியிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடிவிட்டதாக தாராபுரம் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனத்தை பறிகொடுத்த நபர்கள் புகார் தெரிவித்திருந்தனர்.

அந்தப் புகார்களை பதிவு செய்த காவல்துறையினர், தாராபுரம் நகர் முழுவதும் பொருத்தியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது மூன்று குற்றவாளிகளை அடையாளம் கண்டுபிடித்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதில், கோவை மாவட்டம் செல்வபுரம், சொக்கநாத புதூர் பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளி கார்த்தி என்பவரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது, அவர் தனது கூட்டாளிகளான நந்தகுமார், மகேஸ்வரன், வல்லரசு ஆகியோரை அடையாளம் காட்டினார்.

இதனைத் தொடர்ந்து, தொடர்புடைய 3 பேரையும் தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...