பல்லடத்தில் பேருந்தில் கல்லூரி மாணவர்கள் ஆபத்தான பயணம் - நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்வதைத் தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய செயல்பட்டுவருகிறது.

இந்தப் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளில் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்படும்.



இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் ஆபத்தை உணராமல் பேருந்துகளின் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.



பேருந்து நடத்துனர் அறிவுறுத்தினாலும், கல்லூரி மாணவர்கள் அதைக் கேட்காமல் பேருந்து படிக்கட்டுகளில் சாகசம் என நினைத்து உயிர் பயமின்றி தொங்கியபடி நாள்தோறும் பயணம் மேற்கொண்டுவருகின்றனர்.

விபத்துகள் நடைபெற்று உயிர் பலி ஏற்படும் முன்பு, மாணவர்களின் இந்த ஆபத்தான பேருந்துப் பயணத்தை தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...