கோவையில் ஜமேசா முபின் வீட்டில் கைப்பற்றப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் அழிப்பு

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிபொருட்கள் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் வெடிபொருள் உற்பத்தி நிறுவனத்தில் முறையாக அழிக்கப்பட்டது.



கோவை: கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ வெடி பொருட்கள் முறையாக அழிக்கப்பட்டன.

கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கார் வெடித்து சிதறிய சம்பவத்தில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்தார். போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து சிலிண்டர் வெடிபொருள்களை காரில் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சதி திட்டத்தை தீட்ட ஜமேசா முபின் உள்ளிட்டோர் முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு, தற்போது வரை 13 பேர் கைது செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.



இந்நிலையில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் இருந்து முதல் கட்டமாக பறிமுதல் செய்யப்பட்ட 120 கிலோ அளவிலான வெடிப்பொருட்கள், கோவை சுல்தான்பேட்டை வாரப்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் வெடி பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் மாநகர மற்றும் மாவட்ட போலீசார் உதவியுடன் என்.ஐ.ஏ அதிகாரிகள் முன்னிலையில் முறைப்படி அழிக்கப்பட்டது.

Newsletter

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...