வட இந்தியர்கள் வருகையை தடுக்க கோரி கட்டிடத் தொழிலாளி மகள் எழுதிய கவிதையுடன் ஆட்சியரிடம் மனு

கோவையைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி பாலமுருகன் என்பவர் வட இந்தியர்களின் அராஜகத்தை ஒடுக்கக் கோரி மகள் எழுதிய கவிதையுடன், மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி-யிடம் கோரிக்கை மனுவை அளித்தார்.



கோவை: கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டிடத் தொழிலாளியான இவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், தான் வட இந்தியர்களால் வேலையின்றி தவிப்பதாகவும், கட்டிடத் தொழிலில் வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகரிக்கும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றார்.



மேலும் இதேபோல் வட இந்தியர்களின் ஆதிக்கம் நீடிக்கும் நிலையில் இது தமிழ்நாட்டுக்குப் பேராபத்து எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த மனுவில், தனது மகள் எழுதிய கவிதை தொகுப்பையும் இணைத்துள்ளார்.

'பேனா,பென்சிலுக்கும் சண்டையிடும் அரசியல்வாதிகளுக்கும், விஜயா? அஜித்தா? என சண்டையிடும் ரசிகர் பெருமக்களுக்கும் ஒரு முக்கியமான வேண்டுகோள்...அழிந்து வரும் தமிழகத்தையும், எனது தமிழ் மண்ணையும் மீட்டெடுப்போம்.. வட இந்தியர்களிடமிருந்து என்னை போன்றவர்களையும், நமது வருங்காலத்தையும் போற்றி பாதுகாப்போம், போராடுவோம் தமிழகத்தை மீட்கும் வரை' இப்படிக்கு தமிழனின் ஒருவர் தமிழ் மதி என அந்த கவிதை தொகுப்பு முடிகிறது.



எங்கள் பிள்ளைகள், வட இந்தியர்களுக்கு அடிமையாகி விட கூடாது என்று ஆதங்கப்படும் பாலமுருகன், தனது கோரிக்கை மனுவால் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

Newsletter

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழா

கோவை நவஇந்தியாவில் உள்ள Sri Ramakrishna கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 36வது பட்டமளிப்பு விழா இரண்டு நாட்கள் நடைபெற்றத...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO விண்வெளி கண்காட்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் ISRO உடன் இணைந்து விண்வெளி ஆராய்ச்சி கண்காட்சி நடைபெற்றது. கோயம்புத்தூர்...

சூலூரில் மயக்க மருந்து கொடுத்து பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை; ஒருவர் கைது, மற்றொருவருக்கு வலைவீச்சு

கோவை மாவட்டம் சூலூரில் 33 வயது பெண்ணுக்கு மயக்க மருந்து கலந்த பானம் கொடுத்து இருவர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக...

அன்னூர், நீலம்பூர் தொடர் திருட்டு வழக்கு: 72 மணி நேரத்தில் கைது நடவடிக்கை; தங்கச் சங்கிலி, வாகனம் பறிமுதல்

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் நீலாம்பூர் பகுதிகளில் நடைபெற்ற தொடர் திருட்டு மற்றும் சங்கிலி பறிப்பு வழக்குகளை காவல்துறைய...

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...