வால்பாறையில் தைப்பூச திருவிழா - பறவைக் காவடியில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற தைப்பூச திருவிழாவில், பக்தர்கள் 1008 பால் குடம், பறவைக் காவடி, வேல் குத்தி அழகு பூட்டி நேர்த்திக் கடனை செலுத்தினர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

வால்பாறையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனிடையே கடந்த 4ஆம் தேதி கோவிலில் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் நடைபெற்றது.



இந்நிலையில், தைப்பூச தினமான நேற்று காலை ஓம் சக்தி வழிபாடு குழுவினர் சார்பாக 1008 பால் குடம் தீர்த்தம் கொண்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.



இதை தொடர்ந்து வால்பாறை நல்லகாத்து எஸ்டேட் மைதானத்தில் இருந்து முருக பக்தர்கள் அங்க அழகு பறவை காவடி எடுத்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றனர்.



அப்போது, மேளதாளங்கள் முழங்க அரோகரா கோஷத்துடன் ஊர்வலமாக சென்று சுப்பிரமணி திருக்கோவிலை அடைந்து.



தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

Newsletter

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...

கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச...