துடியலூரில் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய பட்ஜெட் 2023 கருத்தரங்கு.!

கோவை துடியலூரில் உள்ள பட்டய கணக்காளர் கல்லூரியில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பட்ஜெட் 2023 குறித்த பட்டய கணக்காளர்கள் விவாதித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் துடியலூரில் பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய பட்ஜெட் 2023 குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.



கோவை துடியலூரில் உள்ள பட்டய கணக்காளர்கள் கல்லூரி வளாகத்தில், இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தின் சார்பில் பட்ஜெட்-2023 குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க தலைவர் சின்ன மஸ்தான் தலைகாயலா தொடங்கி வைத்தார்.



இந்த கருத்தரங்கில் நேரடி வரிகள் குறித்து மும்பையை சேர்ந்த பட்டய கணக்காளர் பிரதீப் காப்பாசி மற்றும் ஜி.எஸ்.டி மற்றும் மறைமுக வரிகள் குறித்து சென்னையை சேர்ந்த பட்டய கணக்காளர் கணேஷ் பிரபு ஆகியோர் பேசினர்.



இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஜலபதி, தென் மண்டல உறுப்பினர் எஸ்.ராஜேஷ், நிர்வாகிகள் ஏ.வி.அருண், எஸ்.பண்ணராஜ், ஆர்.சுந்தரராஜன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சின்ன மஸ்தான் தலைகாயலா பேசியதாவது, அனைத்து பட்டயக் கணக்காளர்களுக்கும் பட்ஜெட் கருத்தரங்கு தேவை என்பதால், நாங்கள் அதனை நடத்தி வருகிறோம்.

இந்த புதிய பட்ஜெட்டில் தொழிலதிபர்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வரிகள் குறித்தான சாதக பாதகங்கள் எடுத்துரைக்க வேண்டியதுள்ளது. இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கத்தினர் பட்ஜெட் குறித்து தெரிவித்து வருகிறோம்.

முக்கியமாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பட்ஜெட் குறித்து அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும். தமிழ்நாடு அரசுடன் இந்திய பட்டய கணக்காளர்கள் சங்கம் இணைந்து நிதித்துறை, ஜி.எஸ்.டி உள்ளிட்டவைகள் குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறது.

கோவை மட்டுமில்லாமல் தென்னிந்தியாவிலுள்ள 45 கிளைகளிலும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. பட்ஜெட் குறித்தான இந்த கருத்தரங்குகள் அனைத்து தொழில் முனைவோர்கள் மற்றும் சி.ஏ படிக்கும் மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து தென்னிந்திய பட்டய கணக்காளர் சங்க முன்னாள் தலைவர் கே.ஜலபதி பேசியதாவது, ரூ.7 லட்சம் வரை வருமான வரி தளர்த்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவித்து இருப்பது வரவேற்கத்தக்கது. பட்ஜெட் குறித்தான கருத்துகளை இந்திய பட்டய கணக்காளர் சங்க பட்டய கணக்காளர்கள் இந்திய அரசுக்கு தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கருத்தரங்கை கோவை கிளையை சேர்ந்த தலைவர் பழனிசாமி மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த கருத்தரங்கில் பட்டய கணக்காளர்கள், தொழிலதிபர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

ஜரிகை பார்டருடன் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு அரசாணை; தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு நன்றி

2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்க மற்றும் வெள்ளி நிற ஜரிகை பார்டருடன் புதிய வடிவமைப்பில் இலவச வேட்டி, சேலை உற்பத்தி...

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...