நீலகிரி உதகையில் பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமை - பொதுமக்கள் அச்சம்

நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் பட்டப்பகலில் உலா வந்த காட்டெருமையால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை எல்க்ஹில் முருகன் கோவிலுக்கு செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அச்சமடைந்தனர்.

உதகை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வனப்பகுதிகளை ஒட்டி உள்ளதால் வனவிலங்குகளின் நடமாட்டமும் இருந்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது.

குடியிருப்பு பகுதிகள் மட்டுமல்லாமல் நகர்புற பகுதிகளிலும், விவசாய நிலங்களுக்குள்ளும் காட்டெருமைகள் அதிகமாக வருகின்றன.



இதனிடையே தைப்பூச திருவிழாவான இன்று எல்க்ஹில் முருகன் கோவிலுக்குச் செல்லும் சாலையில் காட்டெருமை உலா வந்ததால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.



நீண்ட தூரம் சாலையிலேயே நடந்து சென்ற காட்டெருமை வனப்பகுதிக்குள் சென்றவுடன் பக்தர்கள் நிம்மதி அடைந்து கோவிலுக்குச் சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...