ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்ற மயான பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.



கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம் திருவிழா கடந்த மாதம் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் ராஜகோபுரம் முன்பு 85 அடி மூங்கில் கொடி கம்பம் நடப்பட்டு விழா தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை, ஆழியார் ஆற்றங்கரையில் அமைந்துள்ள மயானத்தில் மாசாணி அம்மன் கோயில் கருவறையில் அம்மன் சயன ரூபத்தில் இருப்பது போன்று மயான கொட்டகையில் அம்மனின் திருவுருவம் அமைக்கப்பட்டது.



பின்பு, அம்மனின் காலடியில் அசுரனின் கோர உருவமும் அம்மனின் ஒரு கையில் கபாலம், மற்றொரு கையில் எலும்பு துண்டு வைத்திருக்க அம்மனின் திருவுருவத்திற்கு பட்டுப்புடவை போர்த்தப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.



பக்தர்கள் முன்னிலையில் அம்மனின் திருவுருவத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.



அம்மன் அருளாளி அருள் வந்து ஆடியபடி அம்மனின், மணல் திருவுருவத்தை கலைத்தபடியே அம்மன் சிரசின் மீது உள்ள சூலாயத்தை கையில் எடுத்துக் கொண்டு, அம்பிகையின் வலது கையில் உள்ள எலும்பு துண்டை தனது வாயில் கவ்வியபடி ஆக்ரோஷமாக காட்சி அளித்தார்.



இந்த காட்சியை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயபக்தியுடன் கண்டு தரிசனம் செய்தனர். இறுதியில் அம்மனின் திரு உருவத்திலிருந்து மண்ணை எடுத்து கலசத்தில் சேகரித்து எடுத்துச் சென்று கோயிலில் உள்ள கருவறையில் வைக்கப்பட்டது.

திருவிழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்வு வரும் வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...