மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒடுக்கீடு செய்யாத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். மக்களுக்கு விரோதமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.



கோவை: கோவையில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பார்க் மைதானத்தில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்காத மத்திய அரசை கண்டித்தும், தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததற்கும், ஊரக வேலைவாய்ப்பில் முன்னுரிமை பறித்ததற்கும் கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இளைஞர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட தலைவர் ஆகாஷ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தேசிய செயலாளர் நவீன் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதால், காந்தி பார்க் மைதானம் பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...