திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் பதவியேற்பு

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்ட நிலையில் அவருக்கு மேயர் தினேஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள பவன் குமார் ஜி.கிரியப்பனவர், மாநகராட்சி அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்று கொண்டார்.

தமிழகம் முழுவதும், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த கிராந்தி குமார், கோவை ஆட்சியராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

இந்நிலையில், அவருக்கு பதிலாக, கடலூர் மாவட்ட திட்ட இயக்குனராக இருந்த பவன் குமார் ஜி.கிரியப்பனவர் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டார்.



இந்த நிலையில் திருப்பூர் மாநகராட்சியின் புதிய ஆணையராக பவன் குமார் ஜி.கிரியப்பனவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.



அவருக்கு மாநகராட்சி மேயர் தினேஷ் குமார் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட பவன் குமார் ஜி.கிரியப்பனவர் ஏற்கனவே, தாராபுரம் துணை ஆட்சியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...