உடுமலையில் உலக ஈர நில நாள் விழா கொண்டாட்டம்

உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழாவில், நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வன கோட்டம் அலுவலகத்தில் இன்று உலக ஈர நில நாள் விழா கொண்டாடப்பட்டது.



விழாவில், உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலர் சிவகுமார் வரவேற்றார். துணை இயக்குநர் தேஜஸ்வி விழாவிற்கு தலைமை தாங்கினார்.



அதனைத் தொடர்ந்து திருப்பூர் வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் கணேஷ் ராம் அவர்கள் ஈர நிலங்கள் பாதுகாப்பு குறித்து மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.



நமது ஊரில் உள்ள ஏரி, குளம், குட்டை போன்ற நீராதாரம் உள்ள பகுதிகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மேலும் சிறப்பு விருந்தினர்களாக நிகிலேஷ் மற்றும் டாக்டர். அருண் வெங்கடேசன் கலந்துகொண்டு, ஈர நிலங்கள் குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...