உடுமலை அரசு மருத்துவமனையில் மூலிகை செடிகள் நடவு - மழை உடுமலை அமைப்பு பங்கேற்பு

‘மழை உடுமலை’ என்ற அமைப்பின் சார்பில், உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவில் பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனையில், “மழை உடுமலை” அமைப்பின் சார்பில் பல்வேறு மூலிகை செடிகள் நடவு செய்யப்பட்டன.

உடுமலையில் செயல்பட்டு வரும் “மழை உடுமலை” அமைப்பின் 41வது தொடர் வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் 55வது நிகழ்வாக, உடுமலை அரசு மருத்துவமனை வளாகத்தில் மூலிகை செடிகள் நடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.



அதன்படி உடுமலை அரசு மருத்துவமனையின் சித்தா பிரிவிலுள்ள பூங்கா இடத்தில் நொச்சி, கேசவர்த்தினி, பூனைமீசை, நிலவேம்பு உட்பட பல மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மழை உடுமலை ஒருங்கிணைப்பாளர் ஶ்ரீவர்ஷினி இளங்கோவன், மூலிகைச்செடிகளின் மருத்துவ பயன்கள் குறித்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு எடுத்துரைத்தார்.



இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கலைமுகில் (பொறுப்பு), மருத்துவர்கள் சந்திரசேகரன், நௌஷத்பேகம், சித்தமருத்துவர்கள் லட்சுமிபதி ராஜு, கார்த்திகேயன், செவிலியர் கண்காணிப்பாளர் கனகலட்சுமி மற்றும் செவிலியர்கள், மழை உடுமலை, அபெக்ஸ், அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...