உடுமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில், 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயனடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாமில் 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



உடுமலைப்பேட்டையில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிகல்வித் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதுடைய மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.



இந்த முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்குதல், பிறப்பு மற்றும் 18 வயது உடைய குழந்தைகளுக்கு உதவி செய்தல், உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரை செய்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டன.



இதேபோல், கடுமையாக பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மாத பராமரிப்பு தொகை பெற பரிந்துரை செய்வது, மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பதிவு செய்தல், கண் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகை மருத்துவமும் பார்க்கப்பட்டன.

இந்த முகாமில் அனைத்து வகை மருத்துவர்களும் முகாமுக்கு வந்த மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளித்து, ஆலோசனைகளையும் வழங்கினர்.

இந்த மருத்துவ முகாமில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...