'கொரோனா காலத்தில் மதங்களை கடந்து மனிதநேயம் வெளிப்பட்டது..!' - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பெருமிதம்

கோவையில் மகாத்மா காந்தியின் 75 வது நினைவு நாளையொட்டி நடைபெற்ற மத நல்லிணக்க கருத்தரங்கில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மனிதநேயம் அதிகரித்துள்ளது என்றார்.


கோவை: கோவை மாவட்டத்தில் மகாத்மா காந்தியடிகளின் 75 வது நினைவு நாளை முன்னிட்டு மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் மத நல்லிணக்க கருத்தரங்கம் நடைபெற்றது.



கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டல் அரங்கில் இந்திய கலாச்சார நட்புறவு கழகம், தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், வரவேற்றார்.



பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமை உரையில், மத நல்லிணக்க பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், மனித நேயத்திற்கும் காந்திய கொள்கைகள் எப்போதும் தேவைப்படுகிறது என்றார்.

இதேபோல், கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மதங்களை கடந்து மனிதம் பேசும் மனிதநேயத்தை கொரோனா கால கட்டத்தில் அனைவரும் தெரிந்து கொண்டனர். கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மனித நேயம் அதிகரித்துள்ளது, என்றார்.



இந்த நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் குணசேகரன், முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன், அனைத்து கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர் சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...