மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க நடவடிக்கை!

மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் வாகனங்களால் வனவிலங்குகள் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க 5 இடங்களில் வனத்துறையினர் வேகத்தடை அமைப்பு.



கோவை: மேட்டுப்பாளையம் - உதகை வனப்பகுதி சாலையில் வனவிலங்குகள் விபத்தில் சிக்குவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தளமான நீலகிரி மாவட்டத்திற்கு செல்ல கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தினை கடந்து இரண்டு வனச்சாலைகளின் வழியே பயணித்து தான் நீலகிரி மாவட்டம் செல்லமுடியும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரி சாலை மற்றும் குன்னூர் சாலை ஆகிய இரண்டு வன சாலைகள் உள்ள நிலையில் இந்த சாலைகளில் அடிக்கடி வன உயிரினங்களான காட்டுயானை, மான், சிறுத்தை, காட்டு எருமை, குரங்கு உள்ளிட்ட பல வன சாலைகளை கடந்து வனப்பகுதிக்கு செல்ல முடியும்.

அப்படி சாலையை கடக்கும் போது வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழப்பது அதிகளவில் நடக்கிறது.



குறிப்பாக இரவு நேரங்களில் அதிக அளவில் விபத்துகள் நடப்பதால் வாகன ஓட்டிகளின் வேகத்தை குறைக்கவும், வனவிலங்குகளின் உயிரிழப்பை தடுக்கவும், மேட்டுப்பாளையம் வனத்துறை சார்பில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் 5 இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் ஓடந்துரை பகுதியில் இருந்து தூரிப்பாலம் வரை சுமார் 5 இடங்களில் வேகத்தடைகளை அமைந்துள்ள வனத்துறையினர் மேற்கொண்டு வனச்சாலையில் அதிவேகமாக வந்து வன உயிரினங்களின் மீது விபத்தை ஏற்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...