உடுமலையில் விவசாய கண்காட்சி: கோவை வேளாண் மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் செயல் விளக்கம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் ஹாலில் நடைபெற்று வரும் விவசாய கண்காட்சியில் கோவை வேளாண் கல்லூரி மற்றும் வனக்கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பார்வையாளர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தளி ரோட்டில் உள்ள தேஜஸ் மஹாலில் விவசாய கண்காட்சி நேற்றைய தினம் (28.01.2023) தொடங்கியது.



வரும் 30ஆம் தேதி வரை இந்த விவசாய கண்காட்சியானது நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்த கண்காட்சியில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மாணவர்கள் அபிஷேக், அருண், அஸ்வின், இலியாஸ்,மௌலி தர்ஷன் மற்றும் நந்த குமார் ஆகியோர் கண்காட்சியில் பொருள் விளக்க செயலில் ஈடுபட்டனர்.



இந்த கண்காட்சியில் மல்பெரி மற்றும் எரி பட்டுப்புழு வளர்ப்பு, மானிய திட்டங்கள் மற்றும் மல்பெரி பழச்சாறு, ஜாம், கூட்டுப் புழு சோப்பு போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



பட்டுப்புழுவியல் துறை தலைவர் மற்றும் உதவி இயக்குநர் மனிஷா ஆகியோரின் ஆலோசனையின்படி எரி பட்டுப்புழு வளர்ப்பு குறித்த சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளனர். இந்தக் கண்காட்சியை பட்டுப்புழு மற்றும் வேளாண்மை விவசாயிகள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...