வால்பாறை அருகே அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி

வால்பாறை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி.


கோவை: கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில் வனப்பகுதியில் திடீர் தீ விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம் தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் தீ தடுப்பு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.



ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி போன்ற வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறையினருக்கு தீ தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் அட்டகட்டி வனத்துறை பயிற்சி மையத்தில் வனப்பகுதியில் தீ பிடித்தால் எவ்வாறு தீயைக் கண்டறிவது, அதை எவ்வாறு அணைப்பது என்று தீயணைப்புத் துறையினர் மூலம் விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.



கோடைக்காலம் ஆரம்பித்து உள்ள நிலையில், வனப்பகுதியில் திடீர் தீ போன்ற விபத்துகள் நடைபெறாமல் இருக்கும் வண்ணம், ஆனைமலை புலிகள் காப்பக கலை இயக்குநர் தலைமையில் வனச்சரக அதிகாரிகள் முன்னிலையில் வனப்பகுதியில் தீ தடுப்பு மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.



மேலும் வனப்பகுதியில் உயிருக்குப் போராடும் வண்ணம் மனிதர்கள் இருந்தால் அவர்களை முதல் உதவி அளிப்பது, எவ்வாறு காப்பாற்றுவது என்றும் வால்பாறை அரசு மருத்துவமனை மருத்துவர் ஆனந்தி விளக்கப் பயிற்சி அளித்தார்.



இதில் 100-க்கும் மேற்பட்ட வனசரக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...