'ஜன.31க்குள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்' - தாராபுரம் கோட்ட மின்சார வாரியம் அறிவிப்பு!

பொதுமக்கள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள் தங்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31ஆம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பாலன் அறிவித்துள்ளார்.


தாராபுரம்: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை வரும் 31-ம் தேதிக்குள் கட்டாயம் இணைக்க வேண்டும் என்று தாராபுரம் கோட்ட மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தாராபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வீடு, கைத்தறி, பவர் லூம், குடிசை மின் இணைப்புகளின், மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் கட்டாயமாக இணைக்க வேண்டும்.

தாராபுரம் கோட்டத்தில் 20 மின்சார வாரிய பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. அந்தந்த அலுவலகத்துக்கு உட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு முகாம் ஏற்படுத்தி ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆதார் எண் இணைக்கப்படாத மின் இணைப்புகளுக்கு மின் நுகர்வோருடைய வீட்டிற்கு நேரில் சென்று ஆதார் எண்ணை பெற்றுக்கொள்ள உள்ளனர்.

அதே சமயம் அனைத்து மின்நுகர்வோர்களும் தங்கள் ஆதார் எண் மற்ற விவரங்களை பணியாளர்களிடம் வரும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...

கோவை பீளமேடு மாநகராட்சி பள்ளி தலைமை ஆசிரியருக்கு இந்து தமிழ் திசை அன்பாசிரியர் விருது

இந்து தமிழ் திசை நடத்திய அன்பாசிரியர் விருதுக்கான தேர்வில், பீளமேடு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சகுந்தலா கோ...