சாலை பணிகளால் பாதிக்கப்படும் விளைநிலங்கள் - வாகனங்களை சிறைப்பிடித்த உடுமலை மக்கள்!

திருப்பூர் உடுமலை வழியாக நடைபெறும் நான்கு வழி சாலை பணிக்காக செல்லும் கனரக வாகனங்களால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி சின்னவீரன்பட்டி அருகே பொதுமக்கள் கனரக வாகனங்களை சிறைபிடித்து போராட்டம்.



திருப்பூர்: பொள்ளாச்சியில் இருந்து உடுமலை வழியாக திண்டுக்கல்லுக்கு செல்லும் வகையில், 1500 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகேயுள்ள சின்னவீரன்பட்டி அடுத்த ஆர்.கே.ஆர் பள்ளி பகுதியில் விவசாய நிலங்கள் வழியாக கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

இரவு பகலாக கனரக வாகனங்கள் சென்று வருவதால் விளைநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.



குறிப்பாக தென்னை, வாழை மரம், மல்பெரி செடிகள் உள்ளிட்ட பல்வேறு விளை பொருட்கள் மண் தூசியின் காரணமாக மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



தூசி உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்கும் விதமாக சாலைகளில் தண்ணீர் ஊற்றி விட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் இதுவரை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.



விவசாயிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருவதால், ஆத்திரமடைந்த விவசாயிகள், கனரக வாகனங்களை தடுத்து நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இரண்டு நாளில் சம்பந்தப்பட்ட கனரக ஒப்பந்ததாரரை அழைத்து விசாரணை மேற்கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

விவசாயிகளின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...

கோவையில் தேசிய கால்பந்து வீரர்களுக்கு பயிற்சியாளர் வாய்ப்பு - விண்ணப்பிக்க அழைப்பு

Coimbatore மாவட்ட நேரு விளையாட்டரங்கத்தில் Khelo India திட்டத்தின் கீழ் கால்பந்து பயிற்சி மையத்திற்கு தேசிய அளவில் பதக்க...

கோவையில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைகேட்பு மற்றும் தொழில் வாய்ப்பு கருத்தரங்கம்

கோவையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு குறைகேட்பு கூட்டம் ஜூலை 17 அன்று நடைபெறுகிறது...

கோவையில் பகுதி நேர வேலை தேடி சென்ற கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட வழக்கு; தவெகவினர் 3 பேர் கைது

கோவை பேரூர் அருகே வேலை தேடி உணவகத்திற்குச் சென்ற கல்லூரி மாணவரை, பார்சல் கட்டித் தர மறுத்ததாகக் கூறி தாக்கிய வழக்கில், த...

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...