தமிழகத்தில் பன்றிகாய்ச்சல் நோய்த்தடுப்புக்கான மருந்துக்கள் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் தகவல்


தமிழகத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கான அனைத்து தடுப்பு மருந்துக்களும் தயார் நிலையில் உள்ளதாகவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.



கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான நோய்த்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக சுகாதாரத்துறை இணை இயக்குநர் குழந்தைசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். பன்றிக்காய்ச்சலுக்கான டாமிபுளூ மாத்திரைகள் போதுமான அளவில் அரசு மருத்துவமனையிலும், சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த மாத்திரைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 



மேலும் மக்களிடையே நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அரசு தொடர்ந்து நடத்தி வருவதாகவும் சோப் மூலம் கைகளை நாளொன்றிற்கு குறைந்த பட்சம் 12 முறைகளாக கழுவ வேண்டும் என்பதை மாணவர்களிடம் அறிவுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார். ரூபெல்லா மற்றும் தட்டமைக்கான தடுப்பூசிகள் போடும் பணி அனைத்து மாநிலங்களிலும் வருகிற ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...