உடுமலையில் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை சரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் தக்காளி வரத்து அதிகரிப்பால், நகராட்சி தினசரி சந்தையில் தக்காளி விலை கடுமையாகச் சரிந்துள்ளது. 14 கிலோ கொண்ட பெட்டி 300 ரூபாயில் இருந்து 240 ரூபாயாக குறைந்தது.



உடுமலை: உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால், விலை சரிந்து காணப்படுகிறது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி தினசரி சந்தைக்கு, உடுமலை சுற்றுப்பகுதி விவசாயிகள் விளைபொருட் களை விற்பனைக்கு கொண்டு வந்து, ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர். கேரளா மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து விளைபொருட்களை கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்த வாரம் தக்காளி விற்பனை அதிகரித்த நிலையில், 14 கிலோ கொண்ட பெட்டி, 300 ரூபாய் வரை விற்பனையானது.



இந்நிலையில், இன்று ஒரு பெட்டி தக்காளி 240 ரூபாய் வரை மட்டுமே விலைபோனது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 'தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், பிற மாவட்டங்களில் இருந்தும் தக்காளி வரத் தொடங்கியுள்ளது.



உடுமலை சந்தையில், உள்ளூர் வியாபாரிகள் மட் டுமே கொள்முதல் செய்து வருகின்றனர். வரத்து அதிகரிப்பால் தக்காளி மொத்த விற்பனை விலை சரிந்துள்ளநிலையில், சில்லரை வர்த்தகத்திலும், விலை குறைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...