கிணத்துக்கடவு அருகே ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் - இளைஞர்கள் 2 பேர் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்ததை தட்டிக்கேட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு தேரோடும் வீதியில் உள்ள ஆதிபராசக்தி கோவில் கும்பாபிஷேகத்திற்காக சாலையோரத்தில் டியூப் லைட்டுகள் கட்டப்பட்டிருந்தன.

அப்போது, அப்பகுதியில் குடிபோதையில் வந்த இரண்டு இளைஞர்கள், டியூப் லைட்டுகளை உடைத்துக் கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான ராஜன் என்பவர் அந்த இளைஞர்களை தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள், குடிபோதையில் ஆட்டோ ஓட்டுநர் ராஜன்மீது தாக்குதல் நடத்தினார். இதில், படுகாயம் அடைந்த ஆட்டோ ஓட்டுநரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இது தொடர்பாக ராஜன் அளித்த புகாரின் பேரில் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார்,உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட பெரியார் நகர் பகுதி சேர்ந்த ராஜ்குமார்(வயது 22) சுலைமான்(வயது 21) ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

Newsletter

வடவள்ளியில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 40-ல் உள்ள வடவள்ளி பகுதியில் அனுமதியின்றி விளம்பர போஸ்டர்கள் ஒட்டிய தனியா...

கோவையில் விடுதிக்குள் திருட முயன்ற வடமாநில வாலிபர் கையும் களவுமாக பிடிபட்டார்; போலீசார் விசாரணை

நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஆண்கள் விடுதியில் பைக் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைத் திருட முயன்றதாகக் கூறப்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய் தயாரிப்பு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூலை 8, 9 தேதிகளில் மசாலா பொடிகள் மற்றும் ஊறுகாய்கள் தயாரிப்பு இரண்டு நாள் ப...

அமராவதி-திருமூர்த்தி அணைகளின் இன்றைய (06.07.2026) நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 6ஆம் தேதி 43.44 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 38.2...

தென்மேற்கு பருவமழையால் கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையால் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஜூலை 6ஆம்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் ஜூலை 7 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் கா. ரங்கநாயகி ரா...