மேட்டுப்பாளையம் அருகே மசூதியில் வழிபாடு நடத்துவதில் தகராறு - இருவர் காயம்

மேட்டுப்பாளையம் அருகே பழமையான பெள்ளாதி தர்க்காவில் வழிபாடு நடத்துவதில் சுன்னத் ஜமாத் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் கட்டையால் தாக்கிக் கொண்டதில் இருவர் காயம்.


கோவை: மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் பழமையான தர்காவில் இருதரப்பினர் இடையே வழிபாடு நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில் இருவர் காயமடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பெள்ளாதியில் மிக பழமையான தர்கா உள்ளது.இந்த தர்காவை சுன்னத் ஜமாத் அமைப்பினர் நிர்வகித்து வரும் நிலையில், இந்த தர்காவில் தொழுகை நடத்த ஜக்கிய ஜமாஅத் அமைப்பினர் மற்றும் சுன்னத் ஜமாத் அமைப்பினர் இடையே இன்று பிரச்னை ஏற்பட்டு உள்ளது.

ஜக்கிய ஜமாஅத் பிரிவினர் தொழுகை நடத்த வந்த போது, மற்றொரு தரப்பான சுன்னத் ஜமாத் அமைப்பினர் கதவை மூடியதால் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் பிரச்னை முற்றிக் கைகலப்பாக மாறி, இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.



இதில் தவ்ஹீத் ஜமாஅத் சேர்ந்த முகமது இஸ்மாயில், நசீர் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



இது சம்பந்தமாக காரமடை போலீசார் வழக்குப் பதிவு செய்து சுன்னத் ஜமாத் அமைப்பினர் மூன்று பேரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மசூதியில் வழிபாடு மேற்கொள்ள இரு தரப்பினரும் மோதி கொண்ட சம்பவம் மேட்டுப்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...