பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்கள் என்ன? - மூத்த விமானி பகத்சிங் தகவல்!

பனிக்காலத்தில் விமானங்கள் புறப்பாடு மற்றும் தரையிறங்கும் நிகழ்வுகளை விட தரையிறங்கிய பின் விமான நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதே மிகுந்த சவாலானது என விமானி பகத்சிங் தெரிவித்தார்.



கோவை: பனிக்காலத்தில் விமானங்கள் இயக்குவது குறித்து தமிழ்நாட்டை சேர்ந்த மூத்த விமானி பகத்சிங் கூறியதாவது:



இந்தியா மட்டுமின்றி உலகளவில் பனிக்காலத்தில் விமானங்களை இயக்குவதில் பல்வேறு சிரமங்களை விமானிகள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இன்றைய நவீன உலகில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் விமானத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் டெல்லி, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் மிக அதிகளவில் இருக்கும். ஒவ்வொரு முறையும் விமானங்கள் புறப்படும் போதும் தரையிறங்கும் போதும் விமானிங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.



இருப்பினும் மிகுந்த சவால் என்பது விமானத்தை தரையிறக்கிய பின் ஓடுதளத்தில் இருந்து பத்திரமாக விமானம் நிறுத்துமிடம் வரை ஓட்டி செல்வதில் தான் உள்ளது.

பொதுவாக விமானம் புறப்படும் போதும், தரையிறங்கும் போதும் பிரத்யேக பயிற்சி பெற்ற ஊழியர்கள் விமானிகளுக்கு பல்வேறு சைகைகள் மூலம் உதவி செய்வார்கள். பனிக்காலங்களில் குறிப்பாக இந்தியாவின் வடமாநிலங்களில் இத்தகைய பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.



விமானத்தின் அருகே அவர்கள் நின்ற போதும் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக பணியை துரிதமாக மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

அதிக பனிமூட்டம் நிலவும் விமான நிலையங்களில் உதாரணமாக சாதாரண நாட்களில் ஒரு மணிநேரத்துக்கு 10 விமானங்களை இயக்கினால், பனிக்காலத்தில் அதே ஒரு மணிநேரத்தில் 2 விமானங்களை மட்டுமே இயக்க முடியும். அந்த அளவு நிலைமை படுமோசமாக இருக்கும்.

பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நடவடிக்கையும் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படும், என்றார்.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...